2005-ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திகில், நகைச்சுவை படமான 'பன்ட்டி அவுர் பப்லி'யின் இரண்டாவது பகுதி தயாராக உள்ளது.
இதில் 2017-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற மானுஷி சில்லர் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மானுஷி ஒப்புக் கொண்டால் இதுவே அவரது முதல் படமாக இருக்கும். மேலும் முந்தைய படத்தில் நடித்த அபிஷேக் பச்சன். ராணி முகர்ஜி ஆகிய இருவரும் இரண்டாம் பகுதியிலும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதோடு அமிதாப் பச்சனும் இவர்களுடன் நடிக்கவுள்ளார்.