எச்.ஐ.வியால் பாதிப்படைந்த குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய நாகக் கன்னி!

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்விப்பது எப்படி என பிரபல தொலைக்காட்சி தொடரில் நாகக் கன்னியாக நடித்த மெளனி ராய்க்கு நன்றாகவே தெரியும்.
எச்.ஐ.வியால் பாதிப்படைந்த குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய நாகக் கன்னி!

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்விப்பது எப்படி என பிரபல தொலைக்காட்சி தொடரில் நாகக் கன்னியாக நடித்த மெளனி ராய்க்கு நன்றாகவே தெரியும்.  பிறந்தது முதல் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு அவர்களுடன் ஆடிப்பாடி கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினார் 

ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட விருப்பத்தை நிறைவு செய்து,  தன்னுடன் நடனமாடச் செய்ததோடு, அவர்களுடன் விளையாடி மகிழ்ந்து மாலை முழுவதும் கழித்தார்.

இது குறித்து அவர் கூறியது, "எச்.ஐ.வி மற்றும் அது சார்ந்த தவறான புரிதல் குறித்து மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியமானது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொடுவதன் மூலம் பரவுகிறது என்ற தவறான எண்ணம் மக்களிடமிருந்து நீங்க வேண்டும். இந்தக் குழந்தைகள் கவனிக்கப்பட வேண்டியவர்கள், சமுதாயத்தில் மற்றவர்கள் பெறும் அதே மரியாதை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

"அவர்களும் நம்மைப் போலவே இயல்பானவர்கள். இன்று நான் சந்தோஷமாக உணர்ந்தேன். மேலும் இது என் குழந்தைப் பருவ நாட்களை நினைவூட்டிவிட்டது. இந்த அப்பாவி குழந்தைகளுக்காக மறுபடியும் அந்த நாட்களை மீட்டெடுத்தது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியளித்தது. என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com