தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் அதிகாரியை மாற்றுவது குறித்து தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் கே.பி.ùஜகன் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தலை ஜூலை 14-ஆம் தேதி நடத்த பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.
ந்த தேர்தல் வரும் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் அதிகாரியான வழக்குரைஞர் அ.செந்தில்நாதன் அறிவித்தார். இந்த நிலையில் தேர்தல் அதிகாரியான செந்தில்நாதனை மாற்றக் கோரி, தொழிலாளர் நலத்துறை ஆணையர் மற்றும் இணை ஆணையரிடம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி புகார் மனு அளித்தேன். ஆனால் அந்தப் புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது கோரிக்கையைப் பரிசீலிக்க தொழிலாளர் நலத்துறை ஆணையருக்கு உத்தரவிட வேணடும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் இறுதி நேரத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக கருத்து தெரிவித்து, உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டு மனுவெத் தள்ளுபடி செய்தார்.