ஒரு நிறுவனத்தில் ஹெச் ஆர் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் பரத் நீலகண்டன். ஒரு கட்டத்தில் வேலை சலிப்பு தட்டவே, திடீரென்று முடிவெடுத்து கோலிவுட் பக்கம் தன் கவனத்தை திருப்பினார். நடிக்கும் ஆர்வம் இருக்கவே, ஃபேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து குறும்படத்தில் நடிக்கக் கேட்டார். அது வித்யாசமான அனுபவமாக இருக்கவே, அதன் பின் அனுபமா குமார் நடிப்பில் குறும்படம் ஒன்றினை இயக்கினார். அதன் பின் நடந்த மாற்றங்களை சுவாரஸ்யமாக சினிமா எக்ஸ்ப்ரஸ் ரீலிங் இன் பகுதியில் அவினாஷ் ராமச்சந்திரனிடம் மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர், இயக்குநர் பரத் நீலகண்டன்.