நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மக்களவையில் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 பேர், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர். எஞ்சிய 543 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதில் மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த், ட்விட்டரில் கூறியதாவது:
நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் என்னுடைய ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்குவேன் என உறுதியாகக் கூறுகிறேன். ஜெய் ஹிந்த் என்று கூறியுள்ளார்.