இளையராஜாவுக்காக அனைத்து படைப்பாளிகளும் ஒன்று கூடுங்கள்: பாரதிராஜா கோரிக்கை

இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன....
இளையராஜாவுக்காக அனைத்து படைப்பாளிகளும் ஒன்று கூடுங்கள்: பாரதிராஜா கோரிக்கை

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு கட்டடத்தைப் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக அந்தக் கட்டடம் தொடர்பாக இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவின் நிர்வாகத்துக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, இளையராஜாவின் நீண்டகால நண்பரும் இயக்குநருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களைத் தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது மிகவும் வருத்தத்துக்குரிய நிகழ்வாகும். ஆகையால் அவர் மீண்டும் இசைப்பணிகளை அங்குத் தொடர்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் நவம்பர் 28 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்று கூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com