சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பின்புதான் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன. அது போல் நாக சைதன்யாவும் அதிக படங்களில் நடிக்கிறார்.
இந்த நிலையில் சைதன்யா ரசிகர்கள் சமந்தா குறித்து விமரிசித்து இருக்கின்றனர். நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அது நாயின் கழுத்தில், 'நெம்பர் 1 ஹஸ்பண்ட்' என்று எழுதிய பேட்ச் உள்ள படம். இதைப் பார்த்த சைதன்யா ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.
‘பொது வெளியில் கணவரைப் பற்றி மரியாதையாகப் பேச கற்றுக் கொள்ளுங்கள்' என்று அறிவுரை தந்திருக்கின்றனர் சமந்தா தன்னைப் பற்றி கமென்ட் அடிக்கும் போதெல்லாம் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு சிரித்துவிட்டு நகர்ந்து செல்கிறார் கணவர் நாக சைதன்யா.
ஆனால் சமந்தாவின் கமென்ட்டை சைதன்யா ரசிகர்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டு சமந்தாவிடம் மல்லுகட்டத் தொடங்கி உள்ளனர். ஆனால் அதற்கு சமந்தா எந்த பதிலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.