நூறு படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ள நகைச்சுவை நடிகர் ஜெயசந்திரன் தனது வீட்டுக் குளியலறையில் வழுக்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
வடிவேலுவுடன் ஆறு படத்தில் நடித்தவர் ஜெயசந்திரன். 66 வயதான ஜெயசந்திரன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று காலை குளியலறையில் வழுக்கி விழுந்துள்ளார் ஜெயசந்திரன். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஜெயசந்திரன் உயிரிழந்துள்ளார். மறைந்த ஜெயசந்திரனுக்கு லக்ஷ்மி என்கிற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள்.
நடிகர் சங்கம் சார்பில் விஷால், பொன்வண்ணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.