சுபஸ்ரீ மரணம் குறித்து எல்லோரையும் போல விஜய்யும் பேசினார்: எஸ்.ஏ.சந்திரசேகர் 

சுபஸ்ரீ மரணம் குறித்து எல்லோரையும் போல விஜய்யும் பேசினார் என்று அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 
சுபஸ்ரீ மரணம் குறித்து எல்லோரையும் போல விஜய்யும் பேசினார்: எஸ்.ஏ.சந்திரசேகர் 

சுபஸ்ரீ மரணம் குறித்து எல்லோரையும் போல விஜய்யும் பேசினார் என்று அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அண்மையில் நடைபெற்ற பிகில் திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் கருத்து தெரிவித்திருந்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் கருத்து குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலளித்துள்ளார். 

நாகர்கோவிலில் நடைபெற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுபஸ்ரீ மரணம் குறித்து பேச தமிழநாட்டில் அனைத்து குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதுபோல விஜய்யும் பேசினார். அதற்கு எதிராக யார் பேசினாலும் எங்களுக்கு கவலையில்லை.

தமிழ் திரைத்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு தற்போது எடுத்துவரும் சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. பிகில் படத்தை வெளியிடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. விஜய்யின் கருத்துக்களை எதிர்க்கிறார்கள் என்றால் விஜய் வளர்ந்து கொண்டே வருகிறார் என்று அர்த்தம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com