மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனோரமாவின் மகன் பூபதி, சென்னை தியாகராய நகரில் வசித்து வருகிறார்.
கரோனா வைரஸால் உண்டாகும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இச்சமயத்தில் மது கிடைக்காததால் தூக்க மாத்திரைகளை பூபதி அதிக அளவில் உட்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் மருத்துவமனையில் பூபதிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்து பூபதியின் குடும்பத்தினரிடமிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.