2009-ல் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவும் சினேகாவும் இணைந்து நடித்தபோது இருவருக்குமிடையே காதல் உண்டானது. 2011-ல் காதலை வெளியுலகுக்கு அறிவித்தார் பிரசன்னா. 2012-ல் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். 2015-ல் ஆண் குழந்தை பிறந்தது. விஹான் எனப் பெயர் சூட்டினார்கள்.
சமீபத்தில் சினேகாவுக்கு 2-வதாகப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஆத்யந்தா (Aadhyantha) எனப் பெயர் சூட்டியுள்ளதாக நடிகர் பிரசன்னா தகவல் தெரிவித்தார். மகளுக்குப் பதிலாக மீண்டும் மகன் பிறந்திருந்தால் ஆத்யா (Aadya) எனப் பெயர் சூட்டவிருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் பிரசன்னாவின் பிறந்த நாளான இன்று ஆத்யந்தாவின் புகைப்படங்களை சினேகா இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.