47 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்?: நடிகை சித்தாரா விளக்கம்

47 வயதாகியும் தான் திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை நடிகை சித்தாரா கூறியுள்ளார்.
47 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்?: நடிகை சித்தாரா விளக்கம்

47 வயதாகியும் தான் திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை நடிகை சித்தாரா கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த சித்தாரா, 1986-ல் காவேரி என்கிற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1989-ல் வெளியான புதுபுது அர்த்தங்கள், இவர் நடித்த முதல் தமிழ்ப் படம். 1990-ல் கெளரி வேடத்தில் சித்தாரா நடித்த புது வசந்தம் சூப்பர் ஹிட்டானது. 1993-க்குப் பிறகு ஏராளமான கன்னடப் படங்களில் நடித்தார். நட்புக்காக, படையப்பா படங்களின் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

47 வயதான சித்தாரா இன்று வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்கான காரணத்தைத் தெலுங்கு ஊடகம் ஒன்று அவர் தெரிவித்ததாவது:

இளம் வயதிலேயே இந்த முடிவை எடுத்து அதிலேயே இன்று வரை உறுதியாக உள்ளேன். என் தந்தை பரமேஸ்வரன் நாயர் மீது அதிகப் பாசத்துடன் இருந்தேன். அவர் மரணமடைந்த பிறகு திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் வரவில்லை. சிங்கிளாக இருப்பதிலேயே மகிழ்ச்சியாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com