தன்னுடைய தந்தையான கமல் ஹாசன், தனக்கு எவ்வித தண்டனையும் தந்ததில்லை என நடிகை ஷ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
இன்ஸ்டகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் ஷ்ருதி ஹாசன்.
தந்தையிடம் பெற்ற மோசமான தண்டனை எது என ஒரு ரசிகர் கேட்டிருந்தார்.
அப்பா என்னிடம் கத்தியதில்லை, தண்டனையும் அளித்ததில்லை. அவர் அப்படிப்பட்டவர் கிடையாது. எப்போதும் காரணம், தர்க்கத்தைப் பயன்படுத்துவார். ஒருமுறை நான் தவறு செய்தேன். அதற்கு, நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன் என்றார் அப்பா. அவர் தற்போது சென்னையில் நலமாக உள்ளார். பாதுகாப்புக்காக தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு முடிந்த பிறகு முதலில் படப்பிடிப்புக்குச் செல்வேன். படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றுவதை மிகவும் மிஸ் செய்கிறேன். ஆனால், பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே செல்வேன் என்று கூறியுள்ளார்.