நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்: தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மறைவுக்கு சிம்பு இரங்கல்

மன்மதன் படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்கச் சொன்னார்...
நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்: தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மறைவுக்கு சிம்பு இரங்கல்

தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். 

திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விக்ரம் நடித்த கிங், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களைத் தயாரித்தவர் கிருஷ்ணகாந்த் (52). தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்த கிருஷ்ணகாந்த் சமீபகாலமாக எந்தப் படங்களையும் தயாரிக்கவில்லை.  

இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமாகியுள்ளார். 

டி. ராஜேந்தர், திருடா திருடி இயக்குநர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கிருஷ்ணகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் மன்மதன் படத்தில் நடித்த சிம்பு, கிருஷ்ணகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம். மன்மதன் படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டது. 

என்மீது மிகுந்த அன்புகொண்ட கிருஷ்ணகாந்த், மன்மதன் படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்கச் சொன்னார். நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்கள், இயக்குங்கள் என உற்சாகப்படுத்தியதோடு தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்ட நல்ல மனிதர். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கலங்க வைக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com