எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!        

மேடைப் பாடகராக பாலு, புகழ் வெளிச்சத்துக்குப் பின் எஸ்.பி.பி. என பெயர்கள் மாற, "பாலசுப்பிரமணியம்'' என்று முழுப் பெயரையும் சொல்லி அழைக்கும் ஒரே நபர்
பாடகர்  எஸ். ஜானகி, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
பாடகர் எஸ். ஜானகி, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

                    
மேடைகளில் மட்டுமே கவனம் ஈர்த்து வந்த எஸ்.பி.பி.க்கு சினிமா ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை. இன்னிசைக் குழுக்களில் முதன்மைப் பாடகராக வலம் வந்து கொண்டு இருந்த நேரத்தில், சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாடகி ஜானகியுடன் நடந்த சந்திப்பு ஒன்றுதான் எஸ்.பி.பி.யின் பார்வையை சினிமாவின் பக்கம் திரும்ப வைத்தது. 

"உங்களை நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்... இப்படி குழுக்களில் மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் எப்படி... சினிமாவில் நீங்கள் ஏன் பாடக் கூடாது? யாருடைய சாயலிலும் உங்கள் குரல் இல்லாதது நல்ல விஷயம்...'' எதேச்சையாக நடந்த அச்சந்திப்பில் ஜானகியின் இந்த வார்த்தைகள்தான் எஸ்.பி.பி.யின் சினிமா பயணத்துக்கான முதல் தளம். 

மேடைப் பாடகராக இருந்த நீங்கள், சினிமாவுக்குள் வந்தது எப்படி? என கேட்கும் போதெல்லாம் இந்த சம்பவத்தை மறக்காமல் சொல்லுவார் எஸ்.பி.பி. 

மேடைப் பாடகராக பாலு, புகழ் வெளிச்சத்துக்குப் பின் எஸ்.பி.பி. என பெயர்கள் மாற, "பாலசுப்பிரமணியம்'' என்று முழுப் பெயரையும் சொல்லி அழைக்கும் ஒரே நபர் இன்று வரை ஜானகிதான். இப்போதும் ஜானகியின் இந்த அழைப்புக்கு நெகிழ்ந்து விடுவார் மனிதர்.

12.10.2014 - தினமணி கதிர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com