வன்முறையைத் தூண்டும் விதமான முகநூல் பதிவு: ஹிந்தி நடிகர் கைது!

இரு சமூகத்தினர் இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்ட ஹிந்தி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜாஸ் கான்
அஜாஸ் கான்

மும்பை: இரு சமூகத்தினர் இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்ட ஹிந்தி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் நடிகர் அஜாஸ் கான். இவர் தமிழில் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தின் ஹிந்திப் பதிப்பு, அல்லா கி பந்தா உள்ளிட்ட பல ஹிந்திப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்- 7 ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார்.

இந்தநிலையில் இரு சமூகத்தினர் இடையே வன்முறையைத் தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்டதாக அஜாஸ் கானை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் தனது சமூக வலைதளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கிலும் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com