குடிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 75-ம் இடம் பிடித்த நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்

குடிமைப் பணித் தேர்வில் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் தேர்ச்சி அடைந்து, அகில இந்திய அளவில் 75-ம் இடம் பிடித்துள்ளார்.
குடிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 75-ம் இடம் பிடித்த நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்

குடிமைப் பணித் தேர்வில் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் தேர்ச்சி அடைந்து, அகில இந்திய அளவில் 75-ம் இடம் பிடித்துள்ளார்.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்காக கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்வுகளின் இறுதி முடிவுகளை மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவு பணி (ஐஎஃப்எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்வை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

குடிமைப் பணிகளில் கடந்த ஆண்டு காலியாக இருந்த 927 பணியிடங்களுக்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தோ்வுகளை யுபிஎஸ்சி நடத்தியிருந்தது. முதன்மைத் தோ்வில் தோ்ச்சியடைந்தவா்களுக்கான ஆளுமைத் தோ்வு கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்துக்கு தளா்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து ஆளுமைத் தோ்வுகள் நடைபெற்றன. இத்தகைய சூழலில் குடிமைப் பணித் தோ்வுக்கான இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது.

தோ்வில் இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியான பிரதீப் சிங் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். அவா் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த விவசாயியின் மகன் ஆவாா். தமிழக அளவில் முதலிடமும் தேசிய அளவில் ஏழாமிடமும் பிடித்துள்ளார் கணேஷ்குமார்.

இந்நிலையில் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய், குடிமைப் பணித் தேர்வில் 75-ம் இடம் பிடித்துள்ளார். இந்தத் தேர்வை 2-ம் முறையாக எழுதி தேர்வாகியுள்ளார். இதையடுத்து ஸ்ருதனுக்குத் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com