மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த சனிக்கிழமை மாலை மூச்சுத்திணறலும் லேசான நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் உதவியால் ஓரிரு நாள்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன் என்று தகவல் தெரிவித்தார் சஞ்சய் தத்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து தற்போது குணமடைந்த சஞ்சய் தத், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com