கொண்டாட்டம் வேண்டாம்: நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள்

தன்னுடைய பிறந்த நாளை இந்த வருடம் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள்...
கொண்டாட்டம் வேண்டாம்: நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள்

தன்னுடைய பிறந்த நாளை இந்த வருடம் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செப்டம்பர் 10 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் ஜெயம் ரவி. இந்நிலையில் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:

இன்னும் ஒருசில நாட்களில் வரப்போகும் எனது பிறந்த நாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். 
உங்கள் அன்பு ஒன்று மட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளைச் சிறப்படையச் செய்கிறது.

ஆனால் இந்த வருடம் உலகளாவிய கரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்று தான். கொண்டாட்டங்களையும் கூட்டமாகச் சேர்வதையும் தவிர்த்து விடுங்கள். நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை.

கொண்டாட்டங்களுக்குப் பதிலாக உதவி தேவைப்பட்டவர்களுக்கு எப்படி நான் உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த தொற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com