மும்பை: பிரபல தமிழ் நடிகை ஒருவர் தான் கரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதை தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் ஜெனீலியா. பின்னர் கணிசமான தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்ததுடன் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணந்து கொண்டு நடிப்பில் இருந்து விலகினார்.
இந்நிலையில் தான் கரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதை ஜெனீலியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு எனக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் கடந்த 21 நாட்களாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேன். இந்தக் காலம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.
எனக்கு இருந்த ஆசீர்வாதங்களே கரோனாவுடனான இந்தப் போரை எளிதாக கடக்க உதவியது. தற்போது கரோனா சோதனையில் தொற்று இல்லை என நெகடிவ் வந்ததால், தான் குடும்பத்துடன் மீண்டும் இணைவதால் மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.