இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் ஆகியோர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இது காதல் திருமணம் ஆகும். பிறகு இருவருக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பரஸ்பர முறையில் விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள்.
விஜய்யின் தந்தை ஏ.எல். அழகப்பன் சமீபத்தில் ஒரு பேட்டியில் விவாகரத்துக்கான காரணத்தைக் கூறினார். திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க அமலா பால் விரும்பியதுதான் விவாகரத்துக்குக் காரணம். அம்மா கணக்கு பட வாய்ப்பை தனுஷ் அளித்ததாலேயே அமலா பால் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருந்தார் என்றார்.
இந்நிலையில் தனது விவாகரத்துக்கு தனுஷ் காரணமல்ல என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அமலா பால். அவர் கூறியதாவது:
என் விவாகரத்து தொடர்பான பல கதைகள் சமூகவலைத்தளங்களில் சொல்லப்பட்டு வருகின்றன. இவை தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குகின்றன. தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் விஜய்யிடமிருந்து விவாகரத்து பெற்றேன். திரைத்துறையில் உள்ள யாருக்கும் இதில் சம்பந்தமில்லை. என் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர் தனுஷ். என்னுடைய சமீபத்திய படங்கள் வெளியான பிறகு திருமணம் குறித்து அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
அமலா பால் நடித்துள்ள அதோ அந்த பறவை போல படம் பிப்ரவரி 28 அன்று வெளிவரவுள்ளது.