25 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சுந்தர் சி தன்னிடம் காதல் சொன்ன தருணம் குறித்து பதிவு எழுதியுள்ளார் நடிகை குஷ்பு. இன்ஸ்டகிராமில் அவர் எழுதியதாவது:
இந்த நாளில், 25 வருடங்களுக்கு முன்பு காதலைத் தெரிவித்தீர்கள். நம்முடைய குழந்தைகள் யார் மாதிரி இருக்கும் எனக் கேட்டீர்கள். 25 வருடங்கள் கழித்து எதுவும் மாறவில்லை. உங்களை இன்னமும் அதேபோல விரும்புகிறேன். என் கண்களை நீங்கள் பார்த்தால் இப்போதும் வெட்கப்படுகிறேன். என்னைப் பார்த்து புன்னகைக்கும்போது நான் பலவீனமாகிறேன். சுந்தர், என் வாழ்க்கையின் மிகச் சிறப்பான விஷயம் நீங்கள் தான். என்னைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டதற்காக மிக்க நன்றி. லவ் யூ டா என்று கூறியுள்ளார்.