பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் தனுஷ்.
தாணு தயாரிக்கும் இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் படத்துக்கு கர்ணன் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.