தானும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு அதிகப் புகழை அடைந்துள்ளோம் என நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள பங்கா என்கிற படத்தில் நடித்துள்ள கங்கனா, அதுதொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது
எனக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். அவர் வேறு பின்னணியில் இருந்து வந்தவர். தனக்கென்று ஒரு பெயரை உருவாக்கி அவர் மீது அன்பு செலுத்த வைத்துள்ளார்.
எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமை - சர்ச்சைகள். அதிக சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு அதிகப் புகழை அடைந்துள்ளோம். ஆக்ரோஷமான குணத்துக்காக நிறைய விமரிசனங்களை கோலி எதிர்கொண்டுள்ளார். நானும் ஆக்ரோஷமானவள் தான் என்று கூறியுள்ளார்.