புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை குறித்து நடிகர் சூர்யா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இஐஏ-2020 என்ற புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை, மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கார்த்தி நேற்று அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் தனது சகோதரருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, சூர்யாவும் புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என்று கூறியுள்ளார்.