ப. பாண்டி படத்துக்குப் பிறகு நான் ருத்ரன் என்கிற படத்தை தனுஷ் இயக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகார்ஜூனா, அதிதி ராவ், ஸ்ரீகாந்த் நடிக்கும் இப்படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒரு பகுதிக் காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டு விட்டன. கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை தனுஷ் தொடரவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் வரலாற்று தொடர்பான காட்சிகளை இயக்க தனது சகோதரர் செல்வராகவனை தனுஷ் அழைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என இரு வரலாற்றுப் படங்களை இயக்கிய அனுபவம் உள்ளதால் நான் ருத்ரன் படத்தின் வரலாற்றுக் காட்சிகளை தன்னுடன் இணைந்து செல்வராகவன் இயக்க வேண்டும் என்று தனுஷ் கோரிக்கை வைத்துள்ளதாக அறியப்படுகிறது.
செல்வராகவன் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் புதுப்பேட்டை 2 படத்தை இயக்கவுள்ளார்.