சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 8,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 100 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனாவிலிருந்து காத்துக்கொள்ள கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் விழிப்புணர்வு விடியோக்களை வெளியிட்டுள்ளார்கள் பிரபலங்கள். சச்சின் டெண்டுல்கர், நடிகைகள் தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா போன்றோர் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது தொடர்பான விடியோக்களை வெளியிட்டுள்ளார்கள்.