மருதநாயகம் படத்தில் நானே நடிக்க வேண்டுமென்றால் அதன் கதையை மாற்ற வேண்டும் என கமல் ஹாசன் கூறியுள்ளார்.
கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் ஓபன் பண்ணா தளத்துடன் இணைந்து இன்ஸ்டகிராமில் நேரலையாக உரையாடினார்கள். இதில், மருதநாயகம் படம் பற்றி கமல் கூறியதாவது:
மருதநாயகத்தைப் புத்தகமாக வெளியிடுவதென்றால் உடனே வெளிவந்திருக்கும். படம் என்றால் பணம் வேண்டும். இன்னொன்று, நான் நினைத்த மருதநாயகத்துக்கு 40 வயது. ஒன்று, வேறு நடிகர் நடிக்கவேண்டும். இல்லாவிட்டால் கதையைக் கொஞ்சம் மாற்றவேண்டும் என்று கூறியுள்ளார்.