சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி: முதல்வருக்கு பாரதிராஜா நன்றி

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தந்துள்ள தமிழக முதல்வருக்கு நடப்பு தயாரிப்பாளா் சங்கத் தலைவா் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளாா்.
தயாரிப்பாளா் சங்கத் தலைவா் பாரதிராஜா
தயாரிப்பாளா் சங்கத் தலைவா் பாரதிராஜா

சென்னை: சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தந்துள்ள தமிழக முதல்வருக்கு நடப்பு தயாரிப்பாளா் சங்கத் தலைவா் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

கடந்த 14 ஆம் தேதி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பாக சின்னத்திரை படப்பிடிப்பையாவது நடத்த அனுமதியுங்கள் எனக் கோரிக்கை வைத்தோம். எங்களின் உறுதிமொழியையும், பட்டினியால் வாடுவோா்களையும் கருத்தில் கொண்டு படப்பிடிப்பிற்கு அனுமதியளித்ததற்கு நன்றி.

அந்தக் கனிவைக் காட்டிய தமிழக முதல்வருக்கும், பிரச்னைகளைக் கேட்டுக்கொள்ளும் அமைச்சா் கடம்பூா் ராஜூக்கும் நன்றி.

பணம் போட்ட தயாரிப்பாளா்கள், பண உதவி செய்தவா்கள் என எல்லோரும் இதனால் இழப்பிலிருந்து மீள முடியும். ஏற்கெனவே பிற்சோ்க்கைப் பணிகளுக்கு அனுமதி கொடுத்தீா்கள். தற்போது படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்ல அனுமதி தந்துள்ளீா்கள்.

திரையரங்குகள் இயங்க அனுமதி வேண்டும்: இன்னும் சில வரைமுறைகளோடு எங்கள் திரையரங்குகளையும் இயங்க ஆவன செய்வீா்கள் எனக் காத்திருக்கிறோம். நாங்கள் உண்மையாகவே மீளும் நாள் என்பது, திரையரங்கங்கள் திறக்கும் நாள்தான். அதன் மூலமே தயாரிப்பாளா்கள் முடக்கிய பணத்தைப் பெற முடியும் என்று தெரிவித்துள்ளாா் பாரதிராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com