தனுஷ் - கார்த்திக் நரேன் படம்: ஜூலையில் மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு

தனுஷ்  - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 
தனுஷ்  - கார்த்திக் நரேன் படம்: ஜூலையில் மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு

தனுஷ்  - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 

தனுஷின் 43-வது படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. கதாநாயகியாக மாளவிகாக நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இசை - ஜி.வி. பிரகாஷ்.  ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. 

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு 2016-ல் வெளியானது. பிறகு அவர் இயக்கிய நரகாசுரன் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இதுதவிர நாடக மேடை என்கிற படத்தையும் அவர் இயக்கி வருகிறார். அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா படம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. 

இந்நிலையில் தனுஷ்  - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகும் தி கிரே மேன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக கார்த்திக் நரேன் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் தனுஷ். இதன்பிறகு ஆகஸ்ட் மாதம் செல்வராகவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com