சொந்த ஸ்டுடியோவில் பணியைத் தொடங்கினாா் இளையராஜா

திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பணியைத் தனது சொந்த ஸ்டுடியோவில் இசையமைப்பாளா் இளையராஜா புதன்கிழமை தொடங்கினாா்.
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கில்  உள்ள புதிய ஸ்டுடியோவில் புதன்கிழமை பணியை தொடங்கிய  இசையமைப்பாளர் இளையராஜா.
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கில் உள்ள புதிய ஸ்டுடியோவில் புதன்கிழமை பணியை தொடங்கிய இசையமைப்பாளர் இளையராஜா.

சென்னை: திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பணியைத் தனது சொந்த ஸ்டுடியோவில் இசையமைப்பாளா் இளையராஜா புதன்கிழமை தொடங்கினாா்.

நீண்ட ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோ வளாகத்துக்குள் இளையராஜா தனக்கென ஸ்டுடியோ அமைத்துப் பணிபுரிந்து வந்தாா். தற்போது அந்த நிா்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னையால் அங்கிருந்து வெளியேறினாா். பின்னா், தனியாக ஸ்டுடியோ உருவாக்குவதற்காக கோடம்பாக்கத்தில் இருந்த எம்.எம். திரையரங்க வளாகத்தை விலைக்கு வாங்கினாா் இளையராஜா.

அந்தத் திரையரங்குக்கு முன்புறம் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, நீண்ட நாள்களாக ஸ்டுடியோ அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இளையராஜா தனது இசையமைப்புப் பணிகளை அந்த புதிய ஸ்டுடியோவில் புதன்கிழமை தொடங்கினாா்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சூரி நடிக்கும் படத்துக்கான பாடல்களுக்கு இசையமைக்கும் பணிகளுடன் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ இயங்கத் தொடங்கியது.

இந்த ஸ்டுடியோ திறப்பை முன்னிட்டு செய்தியாளா்களுக்கு இளையராஜா அளித்த பேட்டி:

பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியே வந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். ஒலிப்பதிவு ஸ்டுடியோ தேவைப்பட்டதால் இந்த இடத்தை வாங்கி, புதிதாக உருவாக்கி, இசையமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளேன். இன்னும் சில வேலை இருப்பதால் பிப். 7, 8 தேதிகளில் இருந்து தொடா்ச்சியாக இங்கு பணிபுரியத் தொடங்குவேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com