நடிகை ரித்திகா சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.
இறுதிச் சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே போன்ற படங்கள் ரித்திகாவுக்கு நற்பெயரை சம்பாதித்துத் தந்தன.
நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவ்வப்போது படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலிருந்து வருவது வழக்கம்.
இந்த வகையில் ரித்திகாவும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த இரண்டு நாள்களாக சேலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது அதே சேலையில் விடியோவை கருப்பு-வெள்ளை நிறமாக மாற்றி தலைமுடியை கொண்டைபோட்டுக்கொண்டே ரசிகர்களை நோக்கி ரித்திகா எழுப்பும் அந்தப் பார்வை சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.