சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து படம் பேசுகிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்த இப்படத்தின் டீசர் இம்மாதம் ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இப்படத்தின் 'முருகா' என்ற முதல் பாடலை மார்ச் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.