"பிரதமர் துயரத்தில் நான் பங்குகொள்கிறேன்." - இளையராஜா இரங்கல்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவையடுத்து இசையமைப்பாளர் இளையராஜா தனது கைப்பட இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவையடுத்து இசையமைப்பாளர் இளையராஜா தனது கைப்பட இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நமது பாரதப் பிரதமர் மோடியின் தாயார் மறைவுற்ற செய்தியைக் கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன். பிரதமரின் தாயாக இருந்தாலும், தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத தாய். எனது தாயாரும் அவ்வாறே! என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதுவும் கொடுத்ததில்லை.

இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறெங்கு காண முடியுமோ? அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமரின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(டிச.30) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 100. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com