மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வெளியானது 'விருமன்' பட மதுரை வீரன் பாடல் விடியோ - எப்படி இருக்கிறது அதிதி ஷங்கர் குரல்?

யுவன் ஷங்கர் ராஜா இசையில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்திலிருந்து மதுரை வீரன் பாடல் வெளியானது. 

Published On :

யுவன் ஷங்கர் ராஜா இசையில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்திலிருந்து மதுரை வீரன் பாடல் வெளியானது. 

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். கொம்பன் படத்துக்கு பிறகு கார்த்தி மற்றும் இயக்குநர் முத்தையா இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே கஞ்சா பூ கண்ணால பாடல் வெளியாகி வைரலான நிலையில் தற்போது மதுரை வீரன் என்ற பாடலின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. 

இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அதிதி ஷங்கர் பாடியுள்ள நிலையில் இயக்குநர் ராஜு முருகன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். 

விருமன் பட டிரெய்லர் நாளை (ஆகஸ்ட் 3) மதுரை ராஜா முத்தையா அரங்கத்தில் வைத்து வெளியாகவிருக்கிறது. இந்த நிகழ்வில் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.