பாஜகவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மீது பாடலாசிரியர் சினேகன் மோசடி புகார் அளித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி ஏராளமான தொடர்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் அறியப்படுபவராக இருக்கிறார்.
இவர் மீது பாடலாசிரியர் சினேகன் காவல்துறையினரிடம் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சினேகன் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி ஜெயலட்சுமி பணம் வசூலித்து வந்துள்ளார்.

இதையும் படிக்க | அதர்வாவின் 'குருதி ஆட்டம்' - படம் எப்படி இருக்கிறது?
இதுகுறித்து எனக்கு தெரியவந்தவுடன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் சரியான முகவரி இல்லை என்பதால் நோட்டீஸ் திரும்பி வந்துவிட்டது.
இதனையடுத்து அவரை கைப்பேசியில் தொடர்புகொண்டபோது நேரில் பேசிக்கொள்ளலாம் என்றார். ஆனால் அதற்கு விருப்பமில்லாததால் சட்டப்படி புகார் அளித்துள்ளேன் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! நாளை வைகையில் எழுந்தளுருகிறார்!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


