மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

''என் இனிய....'' - பாரதிராஜா குணமாக நடிகை ராதிகா உருக்கமாக பிரார்த்தனை

பாரதிராஜா விரைவில் குணமாக நடிகை ராதிகா பிரார்த்தனை செய்யும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 11:46 am IST

பாரதிராஜா விரைவில் குணமாக நடிகை ராதிகா பிரார்த்தனை செய்யும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பாரதிராஜா தற்போது உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். கவலைப்பட ஏதுமில்லை எனவும் நான்கு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் பாரதிராஜா விரைவில் குணமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சர்ச் ஒன்றில் நடிகை ராதிகா மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளார். அதனை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோவாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,  என் இனிய இயக்குநர் பாரதிராஜா அவர்களே, நீங்கள் விரைவில் குணமடைய எனது சிறப்பு பிரார்த்தனை. 

நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும். உங்களை விரைவில் காண வேண்டும். ஆரோக்கியமாக இருங்கள். உங்களிடம் பேசுவதை மிஸ் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் ரசிகர்கள் பலரும் பாரதிராஜா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

நடிகை ராதிகாவை கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முழு நேர நடிகராக மாறியிருக்கும் பாரதிராஜா சமீபத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.