
தமிழின் முன்னணி ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடராஜன் 'சதுரங்க வேட்டை', 'நம்ம வீட்டு பிள்ளை', 'கர்ணன்' போன்ற படங்களில் ஹீரோ, வில்லனாக கலக்கிக்கொண்டிருக்கிறார்.
தற்போது மோகன்.ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' படத்தில் நட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | ‘கோப்ரா’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
இந்த நிலையில் எச்சரிக்கை பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் நட்டி எழுதியுள்ளார். அதில், ''டைல்ஸ், இது முதியோர்களின் எதிரி, சமீபத்தில் எனது தாய்மாமனை இழந்துவிட்டேன்.
காரணம் குளித்துவிட்டு வந்த உடன் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். நம்முடைய கௌரவம் டைல்ஸில் இல்லை. நம் முதியோர்களை காப்பதில் இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
தமிழில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்துள்ள நட்டி, விஜய்யின் 'யூத்', 'புலி' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் 'ஜப் வி மெட்', தனுஷின் 'ராஞ்சனா' போன்ற பல ஹிந்தி படங்களுக்கு நட்டி ஒளிப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tiles.. à®à®¤à¯ à®®à¯à®¤à®¿à®¯à¯à®°à¯à®à®³à®¿à®©à¯ à®à®¤à®¿à®°à®¿.. à®à®®à¯à®ªà®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®©à®¤à¯ தாய௠மாமன௠à®à®´à®¨à¯à®¤à¯ விà®à¯à®à¯à®©à¯.. à®à®¾à®°à®£à®®à¯ à®à¯à®³à®¿à®¤à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à¯ வநà¯à®¤ à®à®à®©à¯ à®à®¾à®²à¯ வழà¯à®à¯à®à®¿ à®à¯à®´à¯ விழà¯à®¨à¯à®¤à¯ தலà¯à®¯à®¿à®²à¯ à®à®à®¿à®ªà®à¯à®à¯ à®à®¯à®¿à®°à¯ à®à®´à®¨à¯à®¤à®¾à®°à¯..நமà¯à®®à¯à®à®¯ à®à¯à®°à®µà®®à¯ tiles ல௠à®à®²à¯à®²à¯.நம௠மà¯à®¤à®¿à®¯à¯à®°à¯à®à®³à¯ à®à®¾à®ªà¯à®ªà®¤à®¿à®²à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¤à¯..
â N.Nataraja Subramani (@natty_nataraj) August 29, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






