பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வந்தியத் தேவனாக கார்த்தி - பொன்னியின் செல்வன் 2வது போஸ்டர் வெளியானது

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தியின் தோற்றப் புகைப்படம் வெளியானது. 

Published On :

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தியின் தோற்றப் புகைப்படம் வெளியானது. 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இதனை முன்னிட்டு நடிகர்களின் தோற்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் முதலாவதாக இந்தப் படத்தில் பட்டத்து இளவரசர் ஆதித்ய கரிகாலனாக நடித்த நடிகர் விக்ரமின் புகைப்படம் நேற்று (ஜூன் 4) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

Story image

ஆதித்த கரிகாலனின் தூதுவன் மற்றும் ஒற்றனாக வந்தியத் தேவன் சோழ தேசத்துக்குள் நுழைவார். ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் கதையும், அதிலிருக்கும் மர்மங்களும் அவர் வழியாகவே நமக்கு சொல்லப்படும். அதன்படி திரைப்படத்திலும் வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தியின் கதாப்பாத்திரம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனையடுத்து கதையின் நாயகன் ராஜராஜ சோழனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் தோற்றப் புகைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.