காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சிவப்பு பாண்டா கரடியான சிறுமி: ரசிகர்கள் விரும்பும் ‘டர்னிங் ரெட்’

டிஸ்னி மற்றும் பிக்ஸார் தயாரித்து, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளிவரவுள்ள ‘டர்னிங் ரெட்’ திரைப்படம் மார்ச் 11 அன்று வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் விரும்பும் ‘டர்னிங் ரெட்’

Published On :

டிஸ்னி மற்றும் பிக்ஸார் தயாரித்து, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளிவரவுள்ள ‘டர்னிங் ரெட்’ திரைப்படம் மார்ச் 11 அன்று வெளியாகியுள்ளது.

13 வயது இளம்பெண் எதிர்கொள்ளும் உயர்கல்வி குறித்த அச்சங்கள், பருவமடைதல், உறவுகள், குழப்பமான குடும்பம் ஆகியவற்றை எதிர்கொள்வதைக் குறித்து பேசும் படம்தான் டர்னிங் ரெட். இளம் பெண்ணான மேய் லீ, தன்னுடைய குழப்பமான வயதில் ஒரு பெரிய சிவப்பு பாண்டா கரடியாக மாறுவதே திரைப்படத்தின் கதைக்களமாகும்.

டோமீ ஷி இயக்கத்தில், டிஸ்னி மற்றும் பிக்ஸார் தயாரிப்பில் வெளியாகியுள்ள டர்னிங்ரெட் திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர்கள் என முழுவதும் பெண்கள் என்பது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும். 

ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை டோமீ ஷி மற்றும் ஜூலியா சோ ஆகியோர் திரைக்கதை எழுத லின்ட்ஸி காலின்ஸ் தயாரித்துள்ளார். இளம்பெண்ணின் பரபரப்பான வாழ்க்கையை நகைச்சுவையுடனும் உணர்வுபூர்வமாகவும் கூறும் இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.