மும்பை: குழந்தைப் பேற்றுக்குப் பிறகு முதன் முதலாக படபிடடிப்பில் கலந்து கொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இந்தியாவின் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2018இல் தன்னை விட 10 வருடம் இளையவரான அமெரிக்காவின் நிகோலஸ் ஜோன்ஸ் எனும் நடிகரை மணந்தார். 2022 ஜனவரி 15ஆம் நாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
குழந்தைப் பேற்றுக்குப் பிறகு முதன் முதலாக, அவரே தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் 'சிட்டாடல்' என்னும் வெப்சீரிஸ் படத்தின் படபிடடிப்பில் கலந்துக் கொண்டார்.