பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாகுபலியுடன் ஒப்பிடக்கூடாது என பிரபல நடிகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது.
பொன்னியின் செல்வன் படம் முதல் நான்கு நாள்களில் உலகளவில் ரூ. 230 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் பட வெளியீடு ஒத்திவைப்பு!
இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா ‘இரட்சன்: தி கோஸ்ட்’ படத்தின் புரோமோஷனுக்காக சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது, ‘ சென்னை எனக்கு சொந்த ஊர்போல. ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது அதை உணர்கிறேன். மணிரத்னம் என்னை தமிழில் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதால் நான் பிரபலமடைந்தேன். நான் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்திருக்கிறேன். அதையொற்றியே படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தையும் பாகுபலியையும் ஒப்பிட்டு பேசுபவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்’ எனறார்.