நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

’அது கேவலமானது’ தன் முதல் பாடல் குறித்து விஜய் ஆண்டனி

தமிழில் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி.

News image

விஜய் ஆண்டனி

Updated On :1 பிப்ரவரி 2024, 4:00 pm IST

தமிழில் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின் ’நான் அவன் இல்லை’, ‘காதலில் விழுந்தேன்’, ‘வேட்டைக்காரன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளாராக பணியாற்றி உள்ளார்.

குறிப்பாக, இவருடைய இசையில் வெளியான ‘ஆத்திச்சூடி’ , ‘நாக்க..மூக்க..’ உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தவை.

பின்னர், இசையமைப்பாளாராக இருந்தவர் ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானர். அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் ‘சலீம்’ ‘இந்தியா பாகிஸ்தான்’ படங்களில் நடித்து வணிக ரீதியாகவும் தன்னை நிரூபித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் 150 நாள்களைக் கடந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்ததுடன் வர்த்தக ரீதியாகவும் பல கோடிகளை அள்ளியது.

தற்போது, ரத்தம் படத்தில் நாயகனாக நடித்துவருகிறார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனி டிவிட்டர் பக்கத்தில்   தன் முதல் பாடலைப் பாடிய ரசிகரின் விடியோவைப் பகிர்ந்து 'என் முதல் கேவலமான இசை. சிலவற்றின் கவர் வெர்சன். போகிற நிலைமையைப் பார்த்தால் ஹிட் அடிக்கும் போல’ எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.