தமிழ் சினிமாவில் அறிமுகமாக 32 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகர் விக்ரம் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 32 ஆண்டுகளாகிறது. கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி தான் விக்ரம் நடித்த முதல் படம். தொடர்ச்சியாக அவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதன் காரணமாக தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு பாலா இயக்கிய சேதுதான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இன்றுவரை ரசிகர்கள் அவரை சீயான் என அழைத்துவருகிறார்கள்.
இதையும் படிக்க | சத்யாவின் மரணத்துக்குப் பிறகாவது திருந்துமா தமிழ் சினிமா
அதன் பின்னர் தில், காசி, ஜெமினி, தூள் , சாமி, பிதாமகன் என தொடர்ச்சியாக அவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றிபெற்றன. கமர்ஷியல் படங்கள் ஒருபுறம், எதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்கள் மறுபுறம் என இரண்டு பாதைகளில் பயணித்த அவர் இரண்டிலும் வெற்றிகொடி நாட்டினார்.
தற்போது ஆதித்த கரிகாலனாக அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் உலகெங்கிலும் வசூல் சாதனை படைத்துவருகிறது.
இந்த நிலையில் தான் திரையுலகில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் ஆனதையொட்டி டிவிட்டரில் ரசிகரின் வீடியோவை பகிர்ந்து, இத்தனை ஆண்டுகள். அத்தனை கனவுகள் முயற்சி திருவினையாக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே. இந்த 32 ஆண்டுகளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்க பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
à®à®¤à¯à®¤à®©à¯ வரà¯à®à®à¯à®à®³à¯. à®à®¤à¯à®¤à®©à¯ à®à®©à®µà¯à®à®³à¯. à®®à¯à®¯à®±à¯à®à®¿ திரà¯à®µà®¿à®©à¯ à®à®à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®ªà®¾à®°à¯à®à®³à¯. நà¯à®à¯à®à®³à¯ à®à®²à¯à®²à¯à®¯à¯à®©à®¿à®²à¯ à®à®¤à¯ வà¯à®°à¯à®®à¯ à®®à¯à®¯à®±à¯à®à®¿ à®®à®à¯à®à¯à®®à¯. à®à®¨à¯à®¤ 32 வரà¯à®à®¤à¯à®¤à¯à®à¯à®à¯ நனà¯à®±à®¿. & Abhinandan KK. Thank you for your lovely edit. pic.twitter.com/fv2Pz56IUL
â Aditha Karikalan (@chiyaan) October 17, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாடந்தொரை பகுதியில் பசுவைத் தாக்கிக் கொன்ற புலி

தில்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினா் தீவிர சோதனை
கல்லால் அடித்து நண்பா் கொலை: இருவா் கைது

காா் மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



