நடிகர் சூர்யாவின் படத்தில் நாயகியாக நடித்த பிரபல நடிகை மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவுடன் ‘மாஸ் (எ) மாசிலாமணி’ நடிகர் கார்த்தியுடன் ‘சகுனி’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை பிரணிதா.
தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய நடிகையாக வலம்வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நிதின் ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
இதையும் படிக்க: இயக்குநர் ராஜமௌலி படத்தில் இணையும் பிரபல நடிகை
அதன்பின், பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.