தனக்கு 2-வது திருமணம் இன்னும் நடைபெறவில்லை என்று சின்னத்திரை நடிகர் பப்லு பிரித்விராஜ் கூறியுள்ளார்.
பப்லு என அழைக்கப்படும் பிருத்விராஜ் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் 'கண்ணான கண்ணே' தொடரில் நடித்து வருகிறார். முன்னதாக ரமணி vs ரமணி, வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.
வானமே எல்லை, புதிய மன்னர்கள், அஜித்துடன் இணைந்து அவள் வருவாளா போன்ற சில படங்களிலும் பிருத்வி ராஜ் நடித்திருக்கிறார். தற்போது சில தெலுங்கு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார்.
பிருத்வி ராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி அஹத் என்ற மகன் இருக்கிறார். இவர் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகி தன் மகனை கவனித்து வந்தார்.
முதல் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் அவர், தற்போது 23 வயதாகும் இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பப்லு, 'நான் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவது உண்மைதான். ஆனால், இன்னும் திருமணம் நடைபெறவில்லை' என்று கூறியுள்ளார்.
மேலும் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் நான்தான் முதலில் அவரிடம் ப்ரொபோஸ் செய்தேன் என்றும் கூறியுள்ளார் பப்லு.
அதுமட்டுமின்றி தன்னை மனைவி சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்றும் ஆனால், அவர் தவறை ஒப்புக்கொள்ளமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.