நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

இயக்குநர் விக்ரமன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் கே.எஸ்.ரவிக்குமார்

இயக்குநர் விக்ரமனின் மகனை கே.எஸ்.ரவிக்குமார் தனது ஹிட் லிஸ்ட் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். 

Published On :

இயக்குநர் விக்ரமனின் மகனை கே.எஸ்.ரவிக்குமார் தனது ஹிட் லிஸ்ட் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். 

சூரிய வம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என தமிழில் பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். 90களின் குழந்தைகளுக்கு இன்றளவும் இவரது படங்கள் விருப்பமானவை. 

இந்த நிலையில் இவரது மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹிட் லிஸ்ட் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

Story image

இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சூரியக் கதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இக்குகிறார்கள். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 

Story image

விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர், வெற்றிமாறன், விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் படத்தில் அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் கே.எஸ்.ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.