தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

‘இளைப்பாறு நண்பா’: வந்தியத் தேவனுக்கு பதிலளித்த ஆதித்த கரிகாலன்

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக தனது கோரிக்கையை மறுத்ததற்கு நடிகர் கார்த்திக்கு விக்ரம் பதிலளித்துள்ளார்.

News image

‘இளைப்பாறு நண்பா’: வந்தியத் தேவனுக்கு பதிலளித்த ஆதித்த கரிகாலன்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:49 pm IST

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக தனது கோரிக்கையை மறுத்ததற்கு நடிகர் கார்த்திக்கு விக்ரம் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் , படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் படத்தின் விளம்பரத்திற்காக தஞ்சை செல்வதற்கு நடிகர் கார்த்திக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

அதற்கு நடிகர் கார்த்தி,  “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. எனக்கு காய்ச்சல் அதனால் வரமுடியாது. விடியோ காலில் இளவரசியிடம் பேசி மன்னிப்புக் கேட்கிறேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள்” என நகைச்சுவையாக மறுத்திருந்தார்.

இந்நிலையில் கார்த்தியின் மறுப்பிற்கு நடிகர் விக்ரம் பதிலளித்துள்ளார். அதில் அவர், “சரி தான்.‌இளைப்பாறு நண்பா. ஓய்வெடுத்து நோய் நீங்கி குணமடைக. சில போர்களை தனியாக சென்று தான் வெல்ல வேண்டும்.  தஞ்சை சென்று நம் அன்பு படைகளை சந்தித்தே ஆகவேண்டும்.  வேறொரு தருணத்தில் உன்னை சந்திக்கிறேன் வந்தியத்தேவா" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.