பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரசிகர்கள் தொல்லை: முகநூல் படத்தை நீக்கிய ஃபஹத் ஃபாசில்!

மாமன்னன் படத்தில் ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடித்த ஃபகத் ஃபாசில் ரசிகர்களின் தொல்லை காரணமாக முகநூல் படத்தை நீக்கியுள்ளார்.

Published On :

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த மே - 29 திரையரங்குகளில் வெளியானது.

படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தில் வில்லனாக ரத்னவேலு கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்திருந்தார். திரையரங்குகளில் இக்கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.

ஆனால், ஓடிடியில்  வெளியானதும் ஃபஹத் அதிக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். முக்கியமாக, படத்தில் ஆதிக்க சாதியாளராக நடித்த ஃபஹத்தின் காட்சித் துண்டுகளை, தங்கள் சாதியைக் குறிக்கும் பாடல்களுடன் இணைத்து பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து, ஃபஹத் ஃபாசில் தன் முகநூல் பக்கத்தில் முகப்புப் படங்களில் ஒன்றாக ரத்னவேலு தோற்றப் புகைப்படத்தை பதிவேற்றினார். இதனால், உற்சாகமடைந்த ‘ரத்னவேலு’ ரசிகர்கள் கமெண்ட்களில் சாதிவெறியைத் தூண்டும் வகையிலான விடியோக்களையும் கருத்துக்களையும் பதிவிட்டனர்.

தற்போது, இந்தத் தொல்லைகளால் தான் பதிவேற்றிய படத்தை நீக்கியுள்ளார் ஃபஹத்!

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.