பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

அமீர் இயக்கும் இறைவன் மிகப் பெரியவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 7:01 pm IST

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் அமீர். ஆனால் இவர் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார். கடைசிய இவரது இயக்கதில் ஆதி பகவன் என்கிற படம் வெளியானது.

இந்த நிலையில் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அமீர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அமீர் இயக்கும் இந்த படத்திற்கு இறைவன் மிகப் பெரியவன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் தங்கம் இருவரும் இணைந்து கதை எழுதியுள்ளனர்.

இதில் விஜய் டிவி புகழ் அஷார், கரு பழனியப்பன், மைதீன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அமீரின் பிரதான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.  ஜே எஸ் எம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இறைவன் மிகப் பெரியவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

போஸ்டரில் படம் 2024 இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.மேலும் இந்த போஸ்டர் இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.